Friday, 6 August 2021

தமிழகத்தில் இராவணனின் பிம்பம் என்ன ?

 தமிழர் வரலாறு நமக்குச் சொல்வது இராவணன்:👇


தமிழகத்தில் இராவணனின் பிம்பம் என்ன என்பதை இரண்டாயிரம் ஆண்டு சங்கத் தமிழிலக்கியங்கள்,தேவாரம்,

ஆயிரமாண்டுகளான கோவில்கள் தெளிவாக எடுத்தியம்புகின்றன.ஆனால் நேற்று வந்தவர்கள் நமக்கு புது வரலாறு சொல்கிறார்கள் முப்பாட்டன்,தமிழன் என்று.


இந்த நிலமெங்கும் இராவணனை பற்றி ஒரே வகையான குறிப்புகள்தான் உள்ளது.கயிலாயத்தை அசைக்கப் பார்த்து சிவனின் கட்டை விரலால் அழுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டவன்.அவன் ஸ்ரீ ராமனின் பத்தினி சீதையை கவர்ந்த அரக்கன்.ராமனால் வதம் செய்யப்பட்டவன் இவ்வளவுதான்.இன்று அரசியலுக்காக 50 வருடத்தில் கட்டிவிடப்பட்ட போலி தமிழ் பெருமிதங்கள் உடைத்து வீசப்படத்தக்கது.தமிழ் சங்க இலக்கியங்களே இராவணனை இவ்வாறு சுட்டுகிறது.👇


____________________________________________________________________________________________________


#புறநானூறு_378


|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை||


பொருள்:போர்க்குணம் கொண்ட ராமனின் உடனாக வந்த அவன் மனைவி சீதையை,தன் வலிமை மிகுந்த கரங்களை கொண்ட அரக்கன் கவர்ந்து சென்றான் என #ஊன்பொதி_பசுங்குடையார் ராமாயண கதையை நமக்கு விளக்குகிறார் புறப்பாடலில்.அன்றே  இராவணனை அரக்கனாகத்தான் சுட்டியுள்ளனர்.


#கலித்தொகை - [பாடல் 38 வரிகள் 15]


|| இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

ஐயிருதலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன்போல ||


பொருள்: இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை தூக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்.என அரக்கன் இராவணன் எம்பெருமான் வீற்றிருந்து அருளும் கைலாயத்தை அசைக்கக் கூட முடியவில்லை ஆனால் தன் ஆணவத்தால் முயன்றான் என்பதை கலித்தொகை சொல்கிறது.


அடுத்து தேவாரம் சொல்வதை பாருங்கள்👇


____________________________________________________________________________________________________


#அப்பர்தேவாரம்


|| அரக்க னார்தலை பத்து மழிதர

நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய

பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்

விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே ||


இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.


#திருஞானசம்பந்தர்தேவாரம்


|| பெருக்குஎண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்

நெருக்குண்ணாத் தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்துஏத்த

முருக்குண்ணாது ஓர் மொய்கதிர்வாள்தேர் முன்ஈந்த

திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே ||


பொருள்:அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய அரக்கன் இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத,ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.


இதிலும் சம்பந்தர் 'அறிவிலி,அரக்கன்' இராவணன் என்றே சொல்கிறார்.சிவபெருமான் அவனுக்கு வழங்கிய சந்திர ஹாசம் எனும் வாளினைத்தான் குறிக்கிறார்.......!


இதையே கம்பனும் சொல்கிறான் பாருங்கள்👇


____________________________________________________________________________________________________


#சுந்தரகாண்டம்


|| விண்ணவர் ஏத்த, வேத முனிவர்கள் வியந்து வாழ்த்த

மண்னவர் இறைஞ்சச் செல்லு மாருதி மறம்முன் கூர

அண்ணல் வாளரக்கன் தன்னை அமுக்குவென் என்னக்

கண்ணுதல் ஒழியச் செல்லும் கையிலையங்கிரியும் ஒத்தான் ||


பொருள்: தேவர்கள் துதி செய்கிறார்கள்; வேதம் உணர்ந்த முனிவர்கள் வியந்து வாழ்த்துகிறார்கள்; பூமியில் உள்ளவர்கள் வணங்குகிறார்கள்; வான வீதிவழியே பறந்து செல்லுகின்ற அனுமன்,சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளையுடைய இராவணனை கீழே போட்டு அழுத்துவேன் என்று விரையும் கயிலைமலையைப் போல காட்சியளித்தான்.


சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளினை உடைய இராவணனை,கீழே போட்டு அழுத்துவேன் எனும் கயிலை மலையாகவே காட்சியளித்தாராம் அனுமன்.கடைசியில் வீண் பெருமை பேசும் இராவணனை சீதாதேவி கேட்பதாக கம்பன் கேட்கிறான்.👇


|| குன்று நீ எடுத்த நாள் தன்

சேவடிக் கொழுந்தால் உன்னை  வென்றவன் ||


பொருள்: கயிலாய மலையை நீ பெயர்த்தாயே! அப்போது சிவபெருமான் தமது கால்விரல் துணியை அழுத்தி உன்னை வென்றாரன்றோ? என அரக்கனின் ஆணவ தோல்வியை சுட்டிக் காட்டுகிறார்.


மீண்டும் அப்பர் தேவாரம்👇


|| கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்

உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச

அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்

மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே ||


பொருள்: பொன்னும்,வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து,அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று,எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான்.எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.


மேற்கண்டபடி சைவ,தமிழ் சங்க இலக்கியங்களின் தடத்தின் வழியேயும் இராவணன் அரக்கனே.கயிலாயத்தை ஆணவத்தால் அசைக்கப் முற்பட்டு சிவனால் அழுத்தப்பட்டு அலறி வீழ்ந்தவன்.இதுதான் அவனது பிம்பம்.

Monday, 26 July 2021

ஈழம் ஜூலை கலவரம்

 கருப்பு ஜூலை : 02


அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.


தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.


அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.


ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.


தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.


வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?

ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.


கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.


உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"


உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.


மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.


இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.


நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.


இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.


போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை


ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.


புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.


இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.

சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.


ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?


ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.


அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.


ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.


1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.


வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.


ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.


ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.


அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.


அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.


ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கருணாநிதியும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌


"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"


கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.


அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.


சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.


அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.


மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை


இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.


இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்


அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"


அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.


அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.


பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.


சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது.


ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை


சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.


அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்


இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.


இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.


முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.


அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.


தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும், இனி அப்படி ஒரு காலம் வரவே வராது,


வரவும் கூடாது




Tuesday, 13 July 2021

ஈழ போரில் தமிழன் தோற்க என்ன காரணம்?

 சிங்களவன்....


புத்த மதம் ,

சிங்கள மொழி ...

என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ....

வென்றான்.....


ஆனால்..


தமிழன்.....


தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி....


தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி....


இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,


தமிழ் பேசி கொண்டே...

நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி...


மதம் மாற்றுவதற்காக

தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்...

புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..


தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி....


இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ...

தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...

எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது....

Monday, 12 July 2021

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம்...

 முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள்

நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம்

ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌

கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக..

புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற இலங்கை தமிழ் காவல் அதிகாரிகளுக்காக..

புலிகளின் வங்கி, அடகுகடை முயற்சியில் கொல்லபட்ட தமிழர்களுக்காக‌

வெடிகுண்டு சோதனைகளில் புலிகளால் கொல்லபட்ட தமிழருக்காக‌

புலிகளால் கொல்லபட்ட ராஜினி முதல் ஏராளமான சிந்தனைவாதி தமிழர்களுக்காக..

புலிகளின் கந்தன் கருணை இல்லத்தில் கொல்லபட்ட 80 தமிழ் போராளிகளுக்காக‌

புலிகளால் கொல்லபட்ட சபாரத்தினம் அவரின் படையில் இருந்த ஆயிரம் தமிழருக்காக, ஆமாம் ஆயிரம் தமிழர்கள் அன்று புலிகளாலே கொல்லபட்டனர்

புலிகளால் கொல்லபட்ட மாற்று இயக்க தமிழர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் அந்த தமிழருக்காக‌

புலிகளால் கொல்லபட்ட மெண்டிஸ் போன்ற போராளிகளுக்காக….

துணுக்காய் போன்ற புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்து கொல்லபட்ட ஏராளமான தமிழருக்காக..

ஈழ தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் என்ன உறவு? மொழி உறவாம். ஆனால் இலங்கை இஸ்லாமிய தமிழருக்கும் ஈழதமிழருக்கும் மொழி ஒன்றாயினும் உறவே இல்லையாம், அந்த புலிகளால் மசூதியில் கொல்லபட்ட 200 இஸ்லாமிய தமிழருக்காக‌

புலிகளால் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபாவிற்காக, அவரோடு செத்த 14 தமிழருக்காக, அப்பொழுது சிவராசனால் கொல்லபட்ட ஒரு தமிழக காவலுனுக்காக‌

கொழும்பில் கொல்லபட்ட அமிர்தலிங்கம் எனும் தமிழ் தலைவனுக்காக. இன்னும் 2005 வரை கொல்லபட்ட லஷ்மன் கதிர்காகர் போன்ற தமிழருக்காக‌

ராஜிவ்காந்தியுடன் சென்னையில் கொல்லபட்ட 16 தமிழருக்காக‌

வஞ்சகமாக பேரரிவாளனையும், நளினியினையும் சிக்க வைத்துவிட்டு இறுதிவரை வாய்திறக்காத புலிகளின் வஞ்சகத்திற்காக, கிட்டதட்ட இதுவும் கொலையே

புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா என்பவரை 500 தமிழர்களுடன் சுட்டு கொன்றார்கள் அல்லவா? அந்த கொலைகளுக்காக‌

கருணா பிரிவு போராளிகள் 400 பேரை வெருகல்லில் கொன்ற கொலைக்காக‌

பள்ளி தமிழ் சிறுவர் சிறுமியரை பிடித்து அவர்களை போர்முனைக்கு அனுப்பி கொன்றார்கள் அல்லவா? அந்த அழிவிற்காக‌

3 தமிழ் தலைமுறை கல்வி, வாழ்வு என சகலமும் புலிகளால் அழிந்திருக்கின்றதல்லவா அதற்காக ….

2009ல் மக்களை விடுங்கள் என உலக நாடுகள் கேட்டும் சுட்டிம் அடித்தும் தங்களோடு வைத்திருந்தார்கள் அல்லவா? அந்த கொடூரத்திற்காக‌

அந்த தமிழர்களை எல்லாம் நினைத்து அழுகின்றோம்

பிரபாகரனுக்கு தன் குண்டுதுளைக்காத பிரத்யோக சட்டையினையும், கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிய ராஜிவ் காந்தி

முதலில் பிரபாகரனை நம்பி, பின் இவர் மக்கள் போராளியே அல்ல என முதலில் சொன்ன ராஜிவ்காந்தி சொன்னதும், பின்னாளில் பிரபாகரனுடன் பேசிவிட்டு அலறி அடித்து ஓடிய
நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் சொன்னதும் தான் மகா உண்மை

“பிரபாகரன் தன் உயிருக்கு அஞ்சுகின்றார், துப்பாக்கியினை கீழே வைத்தால் மறுநிமிடம் கொல்லபடுவோம் என சந்தேகிக்கின்றார்

அந்த பயம் இருக்கும் வரை அவர் எதனைபற்றியும், யாரைபற்றியும் கவலைபட மாட்டார், அவர் இருக்கும் வரை அழிவுகள் தொடர்ந்தே இருக்கும்”

இறுதியாக அதுதான் பலித்தது, அந்த அழிவு பல்லாயிர கணக்கான மக்களோடு நிகழ்ந்ததுதான் சோகம்

கொழும்பிலும், வடமராச்சியிலும் களம்புகுந்து தன் கையினை சுட்டுகொண்ட இந்தியா அதன் பின் ஒதுங்கியது, அதாவது ஆரம்பத்திலே இந்திய தலையீடு இல்லையென்றால் 1980களிலே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை, 2009 வரை நீடித்திருக்காது

2009 வரை பிரபாகரன் வாழ ஒரே காரணம் இந்தியா, ராமன் ராவணனுக்கு கொடுத்தது போல, கண்ணன் துரியோதனனுக்கு கொடுத்தது போல பல வாய்ப்புகளை இந்தியா கொடுத்தும் புலிகள் ஏற்கவே இல்லை

சிங்கள தளபதி சொன்னது போல “இந்திரா, ராஜிவ் தலையீடு மட்டும் இல்லையென்றால் 1980களிலே எமது நாடு அமைதியாயிருக்கும், 2009 வரை இழுத்த காரணமே இந்தியாதான்”

எல்லாம் முடிந்துவிட்டது

பலர் புலிகள், முள்ளிவாய்க்கால் என அழுது இந்தியாவிற்கும், கலைஞருக்கும், காங்கிரசுக்கும் சாபமிடட்டும்

காரணமில்லா சாபம் பலிப்பதில்லை

இப்படியாக தமிழர்களை கொன்று, தமிழ் போராளிகளை கொன்று, தமிழ் தலைவர்களை கொன்று, சிங்களன் கொலை முயற்சியில் தப்பிய ராஜிவ்காந்தியினை கொன்ற புலிகள், உண்மையில் யாருக்கு உபயோகமான காரியம் செய்திருக்கின்றார்கள்?

சாட்சாத் சிங்களனுக்கு,, இந்த காரியங்களால் அவனுக்குத்தான் பெருத்த இலாபம். இதனால்தான் அவனால் வெல்ல முடிந்தது

ஆக புலிகள் போராடிய பலன் இதுதான், சிங்களனுக்கு சார்பாகத்தான் அனைத்து கொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்கள்

புலிகள் காரணமின்றி ஒருவித மூர்க்கத்தில் நிகழ்த்திய இக்கொலைகள்தான், சிங்களனுக்கு வெற்றியினை கொடுத்தன, தமிழருக்கு முள்ளிவாய்க்காலை காட்டின‌

உறுதியாக சொல்லலாம், 1970 முதல் 21990 வரை ஈழத்தில் எழும்பிய மிக உணர்ச்சியான கொதிநிலையிலான மக்கள் எழுச்சியினை அடக்கி, சிங்களனிற்கு உதவியாக இருந்தை அன்றி புலிகள் ஒன்றும் செய்துவிடவில்லை

ஆழநோக்கினால் அதுதான் புரியும்

தமிழ்போராட்டம் தமிழர்களை கொன்ற விசித்திரத்தையும், அதனை தடுக்க முடியாத நம் நிலையினையும் நினைத்து நினைத்து அழலாம்…

நாம் மேற்கண்ட தமிழருக்காக அழலாம், புலிகளால் கொல்லபட்ட சிறுபகுதி தமிழர்கள் நிலைதான் சொல்லபட்டிருக்கின்றது, இன்னும் ஆயிரகணக்கான பட்டியல் உண்டு

அது முள்ளிவாய்க்கால் பட்டியலை விட கொடூரமானது..

முறிந்த பனை புத்தகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 முறிந்த பனை புத்தகம்  இங்கே கிளிக் செய்யவும்

Sunday, 11 July 2021

இந்து மதம் பெயர் காரணம்

 இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம்

இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன?

அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை

அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது

இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை சனதான‌ தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர்

பிரிவுகள் இருந்ததே தவிர மூல கொள்கையில் வழிபாட்டில் சிக்கலே இல்லை

அப்பக்கம் அதாவது சிந்து நதிக்கு அப்பக்கம் இருந்தவர்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்கு இவர்களை எப்படி அழைப்பது என சிக்கல் வந்தது

சிந்துநதிக்கு அப்பக்கம் இருப்பது (இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சி என்பது அவர்களுக்கு ஹி என மாறும், அப்படித்தான் சிந்து இந்துநதி ஆனது, கிரேக்கர் அதை இன்டஸ் என்றே அழைத்தனர்

(சில எழுத்துக்கள் அப்படி மாறும், ஜெருசலேம் இங்கு எருசலேம் ஆகும், யாழ்பாணம் ஜாப்னா ஆகும் , அப்படித்தான் சிந்து என்பது இந்து ஆனது, சிந்து மலை, சிவ மலை என்பதெலாம் இந்துகுஷ் மலை, இமயமலை என்றானது)

ஹிந்தஸ், இந்து , இந்தியா என்றானது இப்படித்தான்

அதாவது இந்து என்பது அந்நியர் சூட்டிய பெயர், அது நிலைத்துவிட்டது

உலகில் யார் தனக்கு சொந்த பெயர் சூட்டினார்கள்? எல்லா பெயர்களும் இன்னொருவரால் சூட்டபடுபவையே

சொந்தமாக பெயர் சூட்டுவதும், தனக்குதானே பட்டமளிப்பதும் திராவிட கட்சிகளின் கலாச்சாரம்

இங்கிருக்கும் நிலபரப்பும் அதில் வாழ்ந்த கலாச்சாரமும் இந்து எனும் பெயர் அன்னியனாலே அழைக்கபட்டது

இங்கு சைவம் வைணவம் என பல பிரிவுகளாக இருந்ததது, அந்நியர் மொத்தமாக இந்து என்றார்கள்

அதற்காக இந்து என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அப்படி ஒரு மதமே இல்லை என்றால் எப்படி?

இதற்கெல்லாம் நன்றாக கேள்வி கேட்பவர்களின் காதை பிடித்து திருகி நாமும் கேட்டிருகின்றோம்

இந்த திராவிடம் என்பது எங்கே உண்டு? எந்த பண்டை இலக்கியங்களில் உண்டு

அட தமிழ்நாடு என்பதே எங்கே உண்டு? தமிழ் கூறும் நல்லுலகம் என சொன்னதே அன்றி தனி தமிழ்நாடு என எந்த இலக்கியம் சொல்லிற்று?

இங்கே சேர சோழ பாண்டி மன்னன், கடையேழு வள்ளல் நாடு என ஏகபட்ட நாடுகள் இருந்திருக்கின்றன‌

என்று இது திராவிட நாடு? தனிதமிழ் நாடு என இருந்தது?

இதை எல்லாம் கேட்டால் பதில் வராது, வரவே வராது

இந்து எனும் வார்த்தை அந்நியனால் இங்கிருக்கும் மதத்திற்கு சூட்டபட்டது, பல பிரிவுகளை கொண்ட மதம் ஒரே வார்த்தையில் அறிய அப்படி அழைக்கபட்டது

ஆனால் திராவிடம் என பெயர் சூட்டியவன் யார்? அதன் நோக்கம் என்ன? அப்பெயரால் இங்கு செய்யபடும் அரசியலுக்கு யார் மூலம் என்பதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

அது முழுக்க தெரிந்தாலும் தெரியாதவர் போல் இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

தொன்மை வாய்ந்த இந்துக்களுக்கு பல அடையாளம் உண்டு, உலகெல்லாம் உண்டு.

தொன்மை வாய்ந்த திராவிட அடையாளம் என ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்

Friday, 2 July 2021

 நெல்லை பக்கம் என்ன தகறாறு?

அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்

கன்னியாகுமரியில் நடப்பதென்ன?

பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது

சாத்தூர் விருதுநகர் பக்கம்?

மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்

அந்த கமுதி பக்கம்?

இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி

விழுப்புரம் பக்கம்?

அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில விஷ்யங்களை சொல்லும்

ஈரோட்டு பக்கம்?

அதெல்லாம் கொங்குநாடு, யுவராஜ் கவுண்டரின் வீரம் உலகறிந்தது

சேலம் தர்மபுரி?

பாமாக காலூன்றி இருக்கும் இடம் என்பதால் சொல்ல ஒன்றுமில்லை

திருச்சி பக்கம்?

அண்ணே அதெல்லாம் முத்தரையர் ஏரியா

தேனி ஆண்டிபட்டி பக்கம்

அய்யோ அதெல்லாம் தேவரய்யாவ கும்பிடுற பூமி

தஞ்சாவூர் பக்கம்?

கீழவெண்மணி முதல் ஏராளம்

ஆக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு சாதி இன்னொரு சாதியுடன் மோதல், கொலை கலவரம்.

ஆமாண்ணே

இது போக நாயுடு ஏரியா, நாயக்கர் ஏரியா?

கண்டிப்பாண்ணே

இதில் பிராமணன் எங்கு எந்த சாதியினை அடித்தான்? யாரை கொளுத்தி கொன்றான்

அண்ணே சாதிவெறி பிராமணர் ஒழிக, அவனுகதான் எல்லாவற்றிற்கும் காரணம்

டேய் வெட்டிட்டு சாகிறது இவனுக? அவங்க எப்படி?

அவங்கதான் சாதியை உண்டாக்கி வெட்ட சொன்னாங்க‌

எங்க சொன்னாங்க? அவங்க சொன்னா நீங்க ஏண்டா வெட்டுறீங்க?

இல்லண்ணே அவனுகதான் உண்டாக்கினது, இப்ப தொடருது, விடமுடியாதுண்ணே

அடேய் அவனுகளே வேண்டாம்னா அந்த சாதியும் உங்களுக்கு வேண்டாம்ல, தூற எறிஞ்சிட்டு அமைதியா வாழுங்கடா

அதெல்லாம் முடியாது. அவன் அன்னைக்கு சொன்னதாலதான் வெட்டிட்டு சாகுறோம்

டேய் சாதிவெறி இருக்கிறது உங்களுக்கா பிராமணனுக்கா

ஹிஹிஹி சத்தியமா எங்களுக்குத்தான்.

நில்லுடா இதுக்கு பதில் சொல்லு

கிரானைட் கொள்ளை அடிச்சது பிராமணனா?

இல்ல‌

தாதுமணலை சுரண்டுனது பிராமணனா?

இல்ல‌

ஆற்றுமணலை விற்றுகொண்டிருப்பது பிராமணனா?

இல்ல

இந்த கட்டபஞ்சாயத்து கூலிப்படை எல்லாம் பிராமணனாடா?

இல்ல‌

தமிழ்நாட்டில் பிராமணர் தொழிற்சாலை எவ்வளவு?

தெரியாதுண்ணே, நிறைய இல்லை

பிராமணர் நடத்தும் மது ஆலை?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பொறியியல் , மருத்துவ கல்லூரி?

அதுவும் ஒண்ணு கூட இல்லண்ணே

பிராமணர் நடத்துன் நிகர்நிலை பல்கலைகழகம்?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பிரமாண்ட மருத்துவமனை?

அதுவும் இல்லண்ணே?

பிராமணர் டிவி?

அதுவும் இல்லண்ணே

தமிழ்நாட்டு நகைகடை, ஜவுளிகடை, டிப்பார்மெண்டல் ஸ்டோர், ஹோட்டல், உணவகம், வட்டிகடை என எல்லா தொழிலிலும் பிராமணனுக்கு எவ்வளவுடா இருக்கு?

தெரியலண்ணே

டேய் சென்னையில எவ்வளவு பிராமணனுக்கு பிரமாண்ட கடை இருக்கு சொல்லு

சொல்ல தெரியலண்ணே, ஒண்ணும் இருக்குற மாதிரி தெரியல‌

தமிழ்நாட்டில் எத்தனை பிராமண எம்பி இருக்கான்?

தெரியலண்ணே

பிராமண எம்.எல்.ஏ?

அதுவும் தெரியலண்ணே..

தமிழ்நாட்டில் ஏதும் பிராமண அமைச்சர்?

அப்படியும் தெரியலண்ணே

தொழிற்சாலை, கல்வி நிலையம், மண் திருட்டு, மலை திருட்டு, வெடி தொழிற்சாலை, மருத்துவமனை என ஒன்று கூட அவர்களை சொல்லமுடியாது, ஆனால் பிராமணன் ஆண்டான், சுரண்டினான், முன்னேற விடமாட்டான் என சொல்லிகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே?

அட போங்கண்ணே இது பெரியார் மண்ணுண்ணே

அதான்டா பிராமணன காட்டி காட்டி நல்லா சம்பாதிச்சி செட்டில் ஆனது யாருடா?

இருங்கண்ணே விசாரிச்சிட்டு வாரேன்

என்ன விசாரிக்க போறே?

நீங்க ஏதோ ஒரு பிராமணன்கிட்ட லம்பா ஒரு தொகை அடிச்சிட்டீங்க, அத விசாரிச்சிட்டு வாரேன்”

Tuesday, 29 June 2021

தமிழரின் மதம் இந்து மதம் மட்டுமே

 இந்து மதம் யார் மதம்? தமிழன் யார் கலாச்சாரம்  என்ன ஆரியர்களின் மதமா??தமிழர்களின் மதமா???


1.ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளும், கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மருங்கூர் பட்டிணத்து கல்வெட்டுகளும் ஏராளம் கிடைத்துள்ளது. அவை அனைத்தும் பழைய காலத்து தமிழும் இந்து சமய கடவுள் உருவங்களும் பொறித்து காணப்படுகின்றது.


2.இன்று ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்த ஹாரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பழைய நகரங்களில் தமிழர்களின் வாழ்வியலும் இந்துக்களின் கடவுள் சிலைகளும்தான் கிடைத்திருக்கின்றன.


3.‘‘இறையனார் அகப்பொருள் உரை’’ என்ற நூலில் முருகன்தான் தமிழ்மொழியின் மூலங்களை உருவாக்கினான் என்றும் அதனை அகத்தியன் மூலம் இலக்கணம் வகுத்து கொடுத்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.


4.பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்க்க மூன்று சங்கங்கள் அமைத்தனர். அந்த சங்கங்களில் சிவனும் முருகனும் தமிழ் புலவர்களாகவே இருந்து அழகுபடுத்தினர்.


5.இன்று நமக்கு கிடைத்த பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் ‘‘மாயோன் மேய காடுறை உலகமும்’’ என்னும் நூற்பாவில் திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி போன்றவை கடவுள்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த காலகட்டத்தில் இந்து சமய கடவுள்களை தவிர வேறு கடவுள்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.


6.மூன்றுவாது தமிழ் சங்கத்தில் எட்டுத்தொகை என்னும் பாட்டு வகையில் உள்ள குறுந்தொகையில் ‘‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’’ என்கின்ற பாட்டு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டு என்று சிவபெருமானால் எழுதப்பட்டு தருமியிடம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.இந்த பாட்டின் கீழே எழுதியவர் இறையனார் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


7."கடவுள் மறுப்பு" என்பது ஈ.வெ.ரா பிறப்பதற்கு முன்பு எந்த தமிழ் இலக்கியத்திலும்இல்லை.


8."சமணர்கள்" என்னும் வெளி மதத்தினர் வெளி மொழியினர் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களாக தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.ஆயினும் சமணர்கள் தங்கள் மதத்தைத் தொடங்கிய "மகாவீரரையே" கடவுளாக ஏற்றுக் கொண்டனர். சமண மதம் தமிழர்கள் மதம் அல்ல.


9.சிவனையும் முருகனையும் வழிபடும் தமிழ் மரபு ஆதிசங்கரரால் "சைவம்" என்ற பெயர் பெற்றது.


10.அதேபோல தமிழகத்தின் முல்லை நிலத்தில் உள்ள திருமால், சங்க இலக்கியங்களான பரிபாடல், ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் தொடர்ந்து சிறப்பித்து பாடப்பட்டுள்ளார்.


11.இந்த திருமாலின் மூல மந்திரமான "நாராயணன்" என்பது தமிழ் வார்த்தையாகும்.இந்தியாவில் எந்த மொழிக்காரராக இருந்தாலும் தமிழில் உள்ள "நாராயணன்" என்னும் மூல மந்திரத்தையே சொல்லுகின்றார்கள் என்று தேவநேய பாவாணர் தமது தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.


12.திருமாலை வணங்கும் சமயம் பரிபாடலில் மாலியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஆதிசங்கரரால் அது "வைணவம்" என்று பெயர் பெற்றது.உலகில் முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியை ஏற்றுக் கொண்ட ஒரே மதம் இந்து மதம். இந்து மத தமிழ் கடவுள்கள் பெயர்கள் சிவன், முருகன், திருமால், இந்திரன், வர்ணன், காளி என்பதாகும்.


"இந்து மதம் தமிழரின் மதம் அல்ல..இந்துவாக இருப்பவன் தமிழன் அல்ல..." என்று குரைத்துக்கொண்டு திரியும் நாய்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Thursday, 18 February 2021

பாதிரி படை

 இந்தியாவில் கிறிஸ்தவத்தை ஏன் முழுமையாகத் தடை செய்ய வேண்டும்?


எல்லா நாட்டு அரசாங்கங்களிடமும் மூன்று வகையான படைகள் மட்டுமே உண்டு; 


ஆனால், ,ஐரோப்பிய நாடுகளிடம் நான்கு  வகையான படைகள் உண்டு;அவை:1.தரைப்படை 2.விமானப் படை 3.கப்பற் படை 4.பாதிரிப் படை


போர் என்று வந்தால் ஒரு நாட்டின் தரைப்படை,விமானப் படை,கப்பற்படை என்று மூன்றுவிதமான ராணுவம் மட்டுமே இன்னொரு நாட்டின் நிலப்பகுதி,மக்களைத் தாக்கும்;


ஆனால்,பாதிரிப் படை போர் நடைபெறும் காலம் தவிர, எல்லா காலத்திலும் இயங்கும் ஐந்தாம் படை;


இந்த ஐந்தாம் படையின் செயல்பாடுகளால் ஒரு நாட்டின் பாரம்பரியம் நிர்மூலமாக்கப்படும்;அதன் செல்வ வளம் எவருக்கும் தெரியாமல் கொள்ளையடிக்கப்படும்;அந்த நாட்டின் தேசபக்தி சிதறடிக்கப்படும்;அந்த நாட்டு மக்களின் சகோதரத்துவமும்,ஒற்றுமையும் நாசமாக்கப்படும்;தேசத் துரோகிகள் கொண்ட ஒரு தலைமுறையையே பாதிரிப் படை உருவாக்கிக் கொண்டு இருக்கும்;ஆனால்,அந்த நாட்டு அரசாங்கமும்,மக்களும் தமது மதம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால்,அவர்கள் அழிந்தே போவார்கள்:


இன்றைய அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை;சோவியத் ரஷ்யா முதல் தென் ஆப்ரிக்கா வரையிலான பெரும்பாலான நாகரீகங்கள் அழிந்தது இந்த பாதிரியார் படையால் தான்!

அமெரிக்காவில் செவ்விந்தியர்களின் நாகரீகம் இன்று அருங்காட்சியகத்தில் மட்டுமே இருக்கின்றது;

தென் அமெரிக்காவின் மயன் நாகரீகம் காணாமல் போய்விட்டது;


ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகள் இன்று காட்டுமிராண்டிகளாக நடத்தப்படுகின்றார்கள்;அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன;அந்த பூர்வகுடிகளில் பெரும்பாலானவர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு,தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்ட சோழர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை;அவர்கள் இன்று வரையிலும் தமிழ் மொழியைத்தான்  பேசி வருகின்றார்கள்:


உலக நாடுகள் அனைத்திற்கும் வழிகாட்டும் ஆன்மீகக் கருத்துக்கள்,அரசியல் கருத்துக்கள்,நாட்டு நிர்வாகக் கருத்துக்கள்,மருத்துவ அனுபவக் குறிப்புகள்,மனிதனை இறை சக்தியுடன் இணைக்கும் கருத்துக்கள் மற்றும் வழிமுறைகள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே இருக்கின்றன;இதை 1700 களிலேயே இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் உணர்ந்து கொண்டார்கள்;


ஒரு பக்கம் இந்து மதம் பற்றி ஆராய்ச்சி செய்வது;மறுபக்கம் அந்த ஆராய்ச்சிகளின் முடிவால்,இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருக்கும் கோவில்,பெண் இனம்,விவசாயம்,பசு இவைகளை அழிப்பது அல்லது இவைகளின் பெருமைகளை அழிப்பது அல்லது இவைகளின் பெருமைகளை இந்துக்கள் அறியவிடாமல் தடுப்பது;


இன்றைய மேற்கு வங்காளத்தில் மட்டும் அன்றைய ராபர்ட் க்ளைவ் சுருட்டிய தங்கம் மட்டும் எவ்வளவு தெரியுமா? 3,00,000 கோடி பவுன் தங்கம்!!! அப்போ,300 ஆண்டுகளில் எத்தனை கோடி டன் தங்கத்தை கிறிஸ்தவ இங்கிலாந்து கொள்ளை அடித்திருக்கும்?


இன்று இந்தியாவில் குருகுலக் கல்வி இல்லை;ஆனால்,கிறிஸ்தவ இங்கிலாந்தில் குருகுலக் கல்வி மட்டுமே இருக்கின்றது;அதன் மூலமாக,தேச பக்தியும்,ஆளுமைத்திறனும் கொண்ட இளைய சமுதாயம் உருவாகிக் கொண்டே இருக்கின்றது;


மெக்காலே கல்வித்திட்டத்தை நமது பாரத நாடு முழுவதும் கொண்டு வந்தது இதனால் தான்;அதனாலும் கூட,நமது பண்பாட்டை அசைக்க முடியவில்லை;ஆங்கில வழிக் கல்விதான் தரமான கல்வி என்று எல்லோரையும் நம்பவைத்து,தெருவுக்கு ஒரு ஆங்கில வழிக் கல்வி வந்த பின்னர் தான் நமது பண்பாட்டில் இருந்து இளைய இந்துக்கள் வெகு தூரம் போய்விட்டார்கள்;


20,00,000 ஆண்டுகளாக மகத்தான செல்வ வளம் உள்ள முதல் நாடாக நமது பாரதம் இருந்தது;இரண்டாவது நாடாக நமது பங்காளி சீனா இருந்தது;செல்வச் செழிப்பு இருந்ததால் தான் ஐரோப்பிய நாடுகள்,நமது நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொள்ள துடித்தார்கள்;கடல் வழி பாதையைத் தேடி உலகம் முழுவதும் இருக்கும்  எல்லா கடல்களிலும் அலைந்தார்கள்;


1800 களில் பாதிரியார்கள் படை பாரதம் முழுவதும் செயல்படத் துவங்கினார்கள்;ஒரே ஒரு பாதிரியார் தனது டைரிக் குறிப்பில் எழுதியுள்ளார்;அப்போது அவர்களின் எண்ணிக்கை சில நூறு பேர்கள் தான்!


“நான் 12 ஆண்டுகளாக தினமும் இயேசு கிறிஸ்து பற்றி இந்து மக்களிடம் போதனை செய்து கொண்டே இருந்தேன்;இன்று 12 ஆண்டுகள்,17 நாட்கள் ஆகின்றது;இன்று தான் ஒரு இந்து,கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதாக மனம் மாறியிருக்கின்றான்;எனது உழைப்பு வீண் போகவில்லை”


இந்தியாவின் சுதந்திரத்திற்கு இந்துக்களும்,இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து தான் போராடினார்கள்;இது கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு கிலியை உருவாக்கியது;1930 முதல் இந்துக்களையும்,இஸ்லாமியர்களையும் பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்யத் துவங்கினான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;

அதே சமயம்,ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இந்திய சுதந்திரத்திற்கு போராடவில்லை;பிரித்து ஆளும் சூழ்ச்சியால் தான்  பாகிஸ்தானாக உருவாகி இன்று வரையிலும்  நமது வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கின்றது;


இன்று 2018 இல் தெருவுக்கு ஒரு பாதிரி இருக்கின்றான்;சாதி மோதல்கள் வருவதற்கு பாதிரியார்களின் நயவஞ்சகம் தான் காரணம் என்பதை வேணுகோபால் கமிஷன் தனது ஆய்வு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கின்றது;மண்டைக்காடு கலவரத்திற்குக் பிறகு,தமிழ்நாடு அரசு உருவாக்கிய வேணுகோபால் கமிஷனின் ஆய்வு முடிவுகளில் இதுவும் ஒன்று;


அரசுத்துறைகளில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள் ஒரு போதும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பதில்லை;உதாரணமாக,ஒரு நகரத்தின் மின் வாரிய தலைமை அதிகாரியான ஈ.ஈ; அல்லது ஜே ஈ வாக ஒரு கிறிஸ்தவன் ஆகும் போது,அவனது/அவளது பதவிக் காலம் முழுவதும் ஒரவஞ்சனையாக மட்டுமே செயல்பட்டுவருகின்றான்;அவனது/அவளது அதிகாரத்திற்கு உட்பட்டு வரும் பகுதியில் இருந்து மின்சாரம் சார்ந்த புகார் ஒரு கோவிலில் இருந்து வந்தால் அதை மதிப்பது கிடையாது;அதே சமயம்,ஒரு புதிய சர்ச்சில் இருந்து புகார் வந்தால் உடனடியாக நேரில் சென்று தனது செல்வாக்கினால் சகலவசதிகளையும் செய்து கொடுப்பது வழக்கம்;


கோவில்கள் தான் இந்து மதத்தின் அடிப்படை ஆதாரமாக இருப்பதால்,கோவில் ஈ ஓ வாக பணிபுரிபவர்களை கிறிஸ்தவராக மதம் மாற்றுவதை திட்டமிட்டு செய்து வருகின்றார்கள்;அப்படி மதம் மாறினாலும்,அவர்கள் தமது இந்துப் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுவது வழக்கம்;அதன் மூலமாக அந்த கோவிலின் வழக்கமான ஆன்மீக நடைமுறைகள்,மரபுகள்,பூஜைகளைச் சீரழிக்கும் வேலை 1998 முதல் நடைபெற்றுவருகின்றன;


முத்தமிழை வித்தவர் 1998 களில் ஒரு பெரிய குழுவினரை அறநிலையத் துறையினுள் கோவில் ஈ ஓ க்களாக தேர்வு செய்து பணி நியமனம் செய்துள்ளான்;இவ்ர்களின் பெரும்பாலானவர்கள் நாத்திகவாதிகள்,கிறிஸ்தவர்கள் ஆவர்;இலுமுனாட்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று இது;இதன் பிறகு தான் சக்தி வாய்ந்த கோவில்களின் தெய்வீக சிலைகள்,தூண்கள்,உற்சவர்கள் திருடப்பட்டன;திருடப்பட்டு,ஐரோப்பாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பிவைக்கப்பட்டன;


பிரேமானந்தா சுவாமிகள் வழக்கில் பிரேமானந்தாவின் மீது எந்தவித தவறும் இல்லை என்று தெரிந்தும் அவர் குற்றவாளியாக ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்குக் காரணம் தீர்ப்பு சொன்ன பெண் நீதிபதி க்ரிப்டோ கிறிஸ்தவர் என்பதால் தான்;(க்ரிப்டோ கிறிஸ்தவர் என்றால் இந்துப் பெயரைக் கொண்டு வாழ்வது;மறைமுகமாக கிறிஸ்தவராக இருப்பது)


பி சி அலக்சாண்டர் தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருந்த போது ஒரு வாய்மொழி உத்தரவு தமிழ்நாடு முழுவதும் இடப்பட்டது;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் ஆகும்;இதை நினைவூட்டும் விதமாக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இதன் படமானது போட்டோவாகவும்,டேபிள் வெயிட்டாகவும்,மரத்தால் செய்யப்பட்ட வடிவங்களாகவும் இருந்தன;இவைகள் அனைத்தையும் பி சி அலெக்சாண்டர் எடுத்து குப்பைத் தொட்டியில் போடும்படி அந்த வாய்மொழி உத்தரவு வந்தது;


கன்னியாக்குமரியில் ஒவ்வொரு பாதிரியாரும் ஒரு நாளுக்கு ஒரு இந்துவையாவது கிறிஸ்தவராக மதம் மாற்றுவது என்ற வெறியில் செயல்பட்டு வருகின்றான்;அப்படி என்றாவது ஒரு நாள் ஒரு இந்துவை மதம் மாற்றிட முடியாத பட்சத்தில் மறு நாள் முதல் ஒரு வேளை உணவு உண்பதை நிறுத்தும் வழக்கம் இருக்கின்றது;


மண்டைக்காடு கலவரம் 1982 வாக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் தூண்டிவிட்டார்கள்;அதன் முடிவாக,தமிழக அரசாங்கத்திடம் அதிகப்படியான சலுகைகளைப் பெற்றார்கள்:


ஒரிஸ்ஸா பூரி ஜெகன்னாதர் திருக்கோவிலில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அவர்களுடைய தட்டில் விழும் காணிக்கைகளை அவர்களே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் தந்திரமாக நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளார்கள்;இதன் மூலமாக,அந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவதை படிப்படியாகக் குறைத்துவிடவும் முடியும்;சில பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த கோவிலையே இழுத்துப் பூட்டவும் முடியும்;


கர்னாடக மாநிலத்தில் வைஷ்ணவர்களையும்,சைவர்களையும் பிரிக்க கிறிஸ்தவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்;அதன் படி,சைவ சமயத்தைப் பின்பற்றும் கர்னாடக மாநில மக்களுக்கு லிங்காயத்துகள் என்று பெயர்;அந்த லிங்காயத்துக்களை கர்னாடக  மாநில காங்கிரஸ் கட்சியானது,தனது  மாநில ஆட்சிக்காலத்தில் தனி மதமாக அங்கீகரித்தது;இந்த அங்கீகாரத்திற்கு பாராட்டு தெரிவித்து அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ கவுன்சில் ,கர்னாடக மாநில முதல்வர் சீதாராமைய்யாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது;இதன் மூலமாக,தங்களுடைய மதம் மாற்றச் செயல்களுக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது;


அட்லி என்ற கிறிஸ்தவ வெறியன்,ஜோசப்பை வைத்து ஒரு திரைப்படம் இயக்கினான்;அதில்,இந்துத் திருமணம் ஒன்று நடைபெறுகின்றது;ஜோசப் தனது காதலியின் மீதான வெறியினால்,மண மேடையில் மணப்பெண்ணைக் கட்டிப்பிடிக்கிறான்;பிறகு,சுய நினைவு வந்து விலகிச் செல்கின்றான்;அதைப் பெருந்தன்மையோடு இந்து மணமகன் ஏற்றுக் கொள்கின்றான்;இந்துக்களாகிய நாமோ அட்லியை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கின்றோம்.(சர்ச்சில் திருமணம் நடைபெறுவதாகவும்,அதில் இப்படி ஒரு காட்சியை எந்த ஒரு கிறிஸ்தவனாவது வைக்க முடியுமா? வைத்தால்,ஐரோப்பாவில் இருந்து ரகசிய பண உதவி தான் கிடைக்குமா?)


கேரளாவில் கன்னியாஸ்திரிகள் 400 பேர்கள் இணைந்து தம்மை கன்னியாஸ்திரியாக சேவை செய்த காலத்தில் பாதிரியார்கள் கற்பழித்தார்கள்;அதற்கு நீதி வேண்டும் என்று ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளார்கள்;அந்த சங்கத்திற்கு யாரும் ஆதரவு தரவில்லை;

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக இந்து தர்மத்தை திட்டமிட்டு அழிக்கும் வேலை 300 ஆண்டுகளாக நடபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


நமது இந்தியாவில் இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக,அதிகமான சொத்துக்கள் இருப்பது கிறிஸ்தவ மிஷநரிகளுக்குத் தான்!


2014 வரை உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்குரிய பணத்தின் மதிப்பை வைத்து என்ன செய்யலாம் தெரியுமா?


100 கோடி இந்துக்கள் ஒவ்வொருவரும் ரூ.5 கோடி பெற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மதம் மாறும் அளவுக்கு குவிந்திருக்கின்றது;


இவர்கள் பள்ளி,கல்லூரி,மருத்துவமனை,அறக்கட்டளை நடத்துவதே சேவை செய்வதற்காக அல்ல;மதம் மாற்றுவதற்காகவே! 


தெரஸா வெளிப்படையாக சொன்னதும் இதையே தான்;இந்து மதத்தைச் செல்லரிக்க வைத்த தெரஸாவை நாம் இன்றும் அன்னை தெரஸா என்று ஆராதிக்கின்றோம்;


1998 இல் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்தோம்;இதை அமெரிக்க அரசாங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது;மறுநாளே அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ கவுன்சிலும் நமது அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையை கண்டித்து அறிக்கை விட்டது;


உலகம் முழுவதும் கிறிஸ்தவம்,இஸ்லாம்,கம்யூனிஸம்,நாத்திகம் ஒன்றுக்கு ஒன்று எதிரிகளாகத் தான் செயல்பட்டு வருகின்றன;ஆனால்,உலகின் ஆதி மதமும்,விஞ்ஞான மதமுமான இந்து தர்மத்தை அழிக்க இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருக்கின்றன;


வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை முறையாகச் செலவு செய்யாமல்,மத மாற்றத்திற்கு செலவு செய்து வந்தன கிறிஸ்தவ என் ஜி ஓக்கள்;அதை சட்டப்படி தடுத்து நிறுத்தினார் நமது சுதேசி சிந்தனைகள் கொண்ட பிரதமர் மோடி அவர்கள்!!!


ஒரே நேரத்தில் ஐந்து பாகிஸ்தான்களுடன் போரிட்டுக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் நாடு,தன்னை யூத மத நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது;


இந்துக்கள் மட்டும் வாழும் நாடாக நமது பாரத நாட்டை ஆக்குவது எப்போது?


தீராத தொல்லைகளையும்,தேசவிரோதச் செயல்களையும் ஐரோப்பியர்களின் பக்கபலத்தால் பாரத நாட்டில் செயல்படுத்தி,நமது சனாதன தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தை தடை செய்யப் போவது எப்போது?

Tuesday, 16 February 2021

தமிழும் கிறிஸ்தவமும்

 தொல்காப்பியம் தோன்றிது  9000 வருடங்களுக்கு மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றி 5000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூல்களை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


திருக்குறள் தோன்றி 2000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


முட்டாள்களே. சிந்திக்கும் திறனற்ற மூடர்களே. பதில் கூறமுடியுமா. 200 வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில அந்நிய கிருஸ்தவன் பாதுகாத்தானா?

Sunday, 24 January 2021

இந்து பெயர் உருவான விதம்

 #இந்து என்ற பெயர் எப்போது வந்தது? தொல்லியல் மற்றும் #தமிழ் இலக்கியங்களின் பார்வை என்ன?


ஹிந்து (இந்து) என்ற வார்த்தையே 200 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் ஜோன்ஸ் தான் தந்தார் என்று இங்கு பரவலாக பேசி வருகின்றனர். இதை சில இந்துத்துவவாதிகளும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உண்மையா? தொடர்ந்து படியுங்கள்...!


பாரத மக்களை #இந்துக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே  இருந்தது. இதற்கு சான்றாக காலத்தால் முந்தைய #கல்வெட்டு இன்றிலிருந்து  2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது...!


ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/DNa_inscription


இதுதான் இன்று நமக்கு கிடைக்கும் காலத்தால் முந்தைய #இந்து என்ற சொல்லாடலுக்கு #தொல்லியல் சான்று. இது தவிர்த்து இதற்கு வேறு என்னென்ன சான்றுகள் உள்ளன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்....!


அடுத்ததாக இஸ்லாமிய அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான #தாரிக்_அல்_ஹிந்த் எனும் நூலில் முக்கியமாக இந்நூல் எழுதப்பட்ட காலமான 1030 களில் இந்தியாவில் இருந்த தத்துவ மரபிற்கு அவர் #ஹிந்து என்று பெயரிட்டு எழுதி உள்ளார். அதாகப்பட்டது 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்....!


அதோடு கி பி 5 ஆம் நுற்றாண்டில் #பூலாங்குறிச்சி  தமிழ்(வட்டெழுத்து) கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது. அநேகமாய் இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் #கல்வெட்டும் பதிவாக இருக்கும். என்றாலும் இதை ஏற்பதில் பல குளறுபடிகள் உண்டு. ஏனென்றால்  இதை பிரித்து எழுதியதை தவறாக புரிந்துகொண்டனர் என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆக இதை சற்று ஒதுக்கி வைக்கலாம்...!


#ஆதாரம் ;


http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm


ஹிந்து" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று #சிவபெருமான் அருளிய விளக்கமாக நண்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் பதிவு செய்ததாவது👇👇


"ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து"


அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே " ஹிந்து. "


 #ஆதாரம் : மேரு தந்த்ரம்  

(31 வது அத்யாயம் )


இதை தவிர " ஹிந்து " என்ற சொல் காளிகா புராணம், பவிஷ்ய புராணம், ப்ருஹந்நாரதீய புராணம், குலார்ணவ தந்த்ரம்  முதலிய பழமையான நூல்களில் "ஹிந்து" என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரித்ர ஆய்வாளர்கள் மேரு தந்த்ரம்  என்ற நூலின் காலமாக எட்டாம் நூற்றாண்டை சார்ந்த நூல் என்று கூறுகிறார்கள்....!


அதோடு தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது #விஜய_நகர_சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில்,

“#ஹிந்து_ராய_ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது......! 


ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் #ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த #ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “#ஹிந்துஸ்தான்_பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் #சத்ரபதி_சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது.....!


”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் #கவிராஜ_பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே #ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது......!


#பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது. ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன....!


மிக முக்கியமாக #பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை #இந்து_ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார்....!


“இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “#இந்துஞானிகள்” என்றார்..!


 (இது ஜடாயு அவர்கள் எழுதிய தமிழ் ஹிந்து எனும் தளத்திலிருந்து.)


வடமொழியில் எழுதப்பட்ட #பிரகாஸ்பதி_ஆகமத்தில் (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .

தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே" என்ற வரிகள் உண்டு.


அதாவது “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது....!


அடுத்து #புத்த_ஸ்ம்ருதி (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிம்ஸாயா தூயதே  யஷ்ச ஸதாசரண தத்பர:

வேத, கோ, ப்ரதிமா  ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"


“ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து என்கிறது”.....!


மேலும், கிறிஸ்தவ மத நூலான பைபிள்  பழைய ஏற்பாட்டில் பாரதத்தை #இந்து_தேசம் என்று சுட்டும் குறிப்புகள் உள்ளது .....!


"இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள" 


#பைபிள்_பழைய_ஏற்பாடு_எஸ்தர் : 1-1


ஆதாரம் : https://www.bible.com/ta/bible/339/EST.1.1-4.TAMILOV-BSI


இது மட்டுமில்லாது தமிழ் #இலக்கியங்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு. ஆனால் இது இடத்தையோ மதத்தையோ குறிக்க பயன்படுத்தப்படாமல் மரபை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ,


கி. பி 12 ஆம் நுற்றாண்டு #ஒட்டக்கூத்தர் இயற்றிய #குலோத்துங்க_சோழன்_உலாவில், குலோத்துங்க சோழனை "பொன் துவரை மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ” 


பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள்....!


இங்கு இந்து என்ற சொல்லாடல் #சந்திர_மரபு என்ற பதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது...!


இது மட்டுமல்லாது இதே பதத்தில் #திருமந்திரம், #தேவாரம், #திருவாசகம், #கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு....!


ஆக தமிழ் இலக்கியங்களிலேயே இந்து என்ற சொல்லாடல் பயின்று வந்துள்ளதால் ஆங்கிலேயன் தான் இந்து என்று பெயரிட்டான் என்ற கூற்று #ஒவ்வாததாகிறது. இவ்வாறு, பொ.மு 500 தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது  இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு பரவி இருந்தது என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறியலாம்....!


Sunday, 10 January 2021

 _*ஹிந்து சகோதரர்களே*_ _பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._ _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._ _மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_ _ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ _நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_ _ஆகையால் உங்களால் முடிந்த பங்களிப்பு_ _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_ _நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._ _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_ _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_ _தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ _*ஜெய் ஸ்ரீ ராம்*_ https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

ராமர் கோவில் கட்ட நிதி தாருங்கள்

 _*ஹிந்து சகோதரர்களே*_


_பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._


 _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._


_மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_


_ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ 


_நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_


 _ஆகையால் உங்களால் முடிந்த  பங்களிப்பு_


 _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_


_நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._


 _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_


 _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_


_தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ 


_*ஜெய் ஸ்ரீ ராம்*_



https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

Thursday, 7 January 2021

பொங்கல் பண்டிகை இந்துகள் பண்டிகை அல்ல

 பொங்கல் தமிழர் பண்டிகை, இந்துகளுக்கு சொந்தமானது இல்லை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது என்று உருட்டுவானுங்க. 


ரிக்வேத காலத்தில் இயற்கையை தான் மக்கள் வணங்கினார்கள், அதே போல தான் தமிழர்களும் இயற்கையை வணங்கினார்கள். 


இயற்கைக்கு உயிர் கொடுத்து வந்தது தான் (நிலம், நீர், காற்று, ஆகாயம், சூரியன்)  நம்ம இந்து கடவுள்கள். ( எ-கா) 

👉 நிலம் - பூமிதாய் , 👉நீர் - வருண பகவான் , கங்கை, 

👉காற்று - வாயு பகவான் 

👉சூரியன் - சூரிய பகவான், அக்னி நாயகன், திரௌபதி, தீபமாக சிவன்(திருவண்ணாமலை) 


இப்படி தான் இந்திய கலாச்சாரம் மனித நாகரீகம் வளர வளர அவர்களின் நம்பிக்கையும் ஆழமான இறை நம்பிக்கையை நோக்கி நகர்ந்தது. 


கவனிக்கவும், 


முதல் நாள் பொங்கலுக்கு நாம சூரியனுக்கு படையலிட்டு வணங்குவோம்,

ஆனால் ஒரு சமுதாயத்தினர் ஒருவனை தவிர யாருக்கும் வணங்க மாட்டோம், அஞ்ச மாட்டோம் ,அவனை வணங்காதவர்கள் காபிர்கள் அவர்கள் மீது புனிதப் போர் நடத்துங்கள் என்கிறது, இன்னொரு குரூப் இயேசுவை தவிர்த்து மற்றதை வணங்கினால் அவர்கள் பாவிகள், அவர்களு நிச்சயம் நரகம் தான் என்கிறது. 


இவர்கள் தமிழர்களா? 


பொங்கலுக்கு இரண்டாம் நாள் மாட்டு பொங்கல்,  மாடுகளை தமிழர்கள் தெய்வங்களாக அன்று பூஜை செய்து வணங்குவார்கள், ஆனால்   நாங்க மாடு கறி தின்போம், அது என் உரிமை என்று மேலே சொன்ன இரண்டு குரூப்பும் கூடவே புரட்சி புளுத்திகள் போராட்டம் நடத்தினாங்க, இவங்க தான் தமிழர்களா? 


மறுபடியும் சொல்ரேன்  நம்மை சுற்றி பெரிய மாய வலை இருக்கு அதன் வலு தன்மை திக, திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற தீயசக்திகளை சார்ந்து இருக்கிறது. 


நீ பெரும்பான்மையாக இருக்கும்வரை மட்டுமே உன்னால் அந்த தெருவில் கூட நடமாட முடியும். உன்னை ஏமாற்ற நாம் தமிழர்கள் என்று கூவும் கூட்டம் தமிழ்மொழியில் கூட பெயர் வைக்காது, தமிழ் பாடம் படிப்பது ஹராம் என்று போராடும் கூட்டம் அது. உணர்ந்து உஷராகிடு.