இந்து மதம் யார் மதம்? தமிழன் யார் கலாச்சாரம் என்ன ஆரியர்களின் மதமா??தமிழர்களின் மதமா???
1.ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளும், கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மருங்கூர் பட்டிணத்து கல்வெட்டுகளும் ஏராளம் கிடைத்துள்ளது. அவை அனைத்தும் பழைய காலத்து தமிழும் இந்து சமய கடவுள் உருவங்களும் பொறித்து காணப்படுகின்றது.
2.இன்று ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்த ஹாரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பழைய நகரங்களில் தமிழர்களின் வாழ்வியலும் இந்துக்களின் கடவுள் சிலைகளும்தான் கிடைத்திருக்கின்றன.
3.‘‘இறையனார் அகப்பொருள் உரை’’ என்ற நூலில் முருகன்தான் தமிழ்மொழியின் மூலங்களை உருவாக்கினான் என்றும் அதனை அகத்தியன் மூலம் இலக்கணம் வகுத்து கொடுத்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
4.பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்க்க மூன்று சங்கங்கள் அமைத்தனர். அந்த சங்கங்களில் சிவனும் முருகனும் தமிழ் புலவர்களாகவே இருந்து அழகுபடுத்தினர்.
5.இன்று நமக்கு கிடைத்த பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் ‘‘மாயோன் மேய காடுறை உலகமும்’’ என்னும் நூற்பாவில் திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி போன்றவை கடவுள்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த காலகட்டத்தில் இந்து சமய கடவுள்களை தவிர வேறு கடவுள்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.
6.மூன்றுவாது தமிழ் சங்கத்தில் எட்டுத்தொகை என்னும் பாட்டு வகையில் உள்ள குறுந்தொகையில் ‘‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’’ என்கின்ற பாட்டு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டு என்று சிவபெருமானால் எழுதப்பட்டு தருமியிடம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.இந்த பாட்டின் கீழே எழுதியவர் இறையனார் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
7."கடவுள் மறுப்பு" என்பது ஈ.வெ.ரா பிறப்பதற்கு முன்பு எந்த தமிழ் இலக்கியத்திலும்இல்லை.
8."சமணர்கள்" என்னும் வெளி மதத்தினர் வெளி மொழியினர் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களாக தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.ஆயினும் சமணர்கள் தங்கள் மதத்தைத் தொடங்கிய "மகாவீரரையே" கடவுளாக ஏற்றுக் கொண்டனர். சமண மதம் தமிழர்கள் மதம் அல்ல.
9.சிவனையும் முருகனையும் வழிபடும் தமிழ் மரபு ஆதிசங்கரரால் "சைவம்" என்ற பெயர் பெற்றது.
10.அதேபோல தமிழகத்தின் முல்லை நிலத்தில் உள்ள திருமால், சங்க இலக்கியங்களான பரிபாடல், ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் தொடர்ந்து சிறப்பித்து பாடப்பட்டுள்ளார்.
11.இந்த திருமாலின் மூல மந்திரமான "நாராயணன்" என்பது தமிழ் வார்த்தையாகும்.இந்தியாவில் எந்த மொழிக்காரராக இருந்தாலும் தமிழில் உள்ள "நாராயணன்" என்னும் மூல மந்திரத்தையே சொல்லுகின்றார்கள் என்று தேவநேய பாவாணர் தமது தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
12.திருமாலை வணங்கும் சமயம் பரிபாடலில் மாலியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஆதிசங்கரரால் அது "வைணவம்" என்று பெயர் பெற்றது.உலகில் முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியை ஏற்றுக் கொண்ட ஒரே மதம் இந்து மதம். இந்து மத தமிழ் கடவுள்கள் பெயர்கள் சிவன், முருகன், திருமால், இந்திரன், வர்ணன், காளி என்பதாகும்.
"இந்து மதம் தமிழரின் மதம் அல்ல..இந்துவாக இருப்பவன் தமிழன் அல்ல..." என்று குரைத்துக்கொண்டு திரியும் நாய்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.